"Abbreviation" என்பதன் தமிழ் அர்த்தம் "சுருக்கம்" என்பதாகும். அதாவது நீண்ட வாக்கியங்கள் அல்லது சொற்தொடர்கள் போன்றவற்றை எளிதாகப் பயன்படுத்துவதற்கு இச்சுருக்கங்கள் உதவுகின்றன.
ஆங்கிலம் துணுக்குகள்
"Abbreviation" என்பதன் தமிழ் அர்த்தம் "சுருக்கம்" என்பதாகும். அதாவது நீண்ட வாக்கியங்கள் அல்லது சொற்தொடர்கள் போன்றவற்றை எளிதாகப் பயன்படுத்துவதற்கு இச்சுருக்கங்கள் உதவுகின்றன.
சங்ககால மகளிர்
தமிழ் இலக்கிய வளர்ச்சியில் களப்பிரர் காலத்தின் தாக்கம்
உலகத் தமிழர்கள் உச்சரிக்கும் ஒரு பெயர் வைரமுத்து
தணல்
வறண்ட நெஞ்சோடு...
வயக்காட்டை
பிளந்துப்போட்ட
விவசாயக்காதலனிடம்
தாகம் தீர்த்துக்கொண்டது
உச்சி சூரியன்
நாகரீக கொள்ளை
பெரும் பணக்காரன் ஆனான்
பள்ளிக்கூடம் நடத்தி...
நிலவுகள் துரத்த நான் நடந்தேன்,-கவிதாயினி தாமரை
நிலவுகள் துரத்த
நான் நடந்தேன்,
உன் நினைவுகள்
தடுக்கி நான் விழுந்தேன்.
உன்னை அன்றி
யாரை நினைப்பேன்?
உருகும் உயிரை
எங்கு புதைப்பேன்?
காலை வந்தும்
கலைய மறுக்கும்
இனிய கனவே!
வைரமுத்துவின் வைரவரிகள்
மின்னல்கள் எனை உரசிப் போனதுண்டு
தேகங்கள் ஒன்றிரண்டு கடந்ததுண்டு - மனம்
சில்லென்று சிலபொழுது சிலிர்ததுண்டு
வைரமுத்துவின் கவிதைகள் - ஒலி நாடா
வைரமுத்துவின் கவிதைகள்
உன்னைச் சுற்றி
ஒளிவட்டம் தோன்றும்...
உலகம் அர்த்தப்படும்...
ராத்திரியின் நீளம்
விளங்கும்....
கவிஞர் வைரமுத்துவின் கவிதைகள் � சிரிப்பு.
சிரிப்புச் சத்தம் கேட்கும்போதெல்லாம்
அது திறந்து கொள்கிறது
வாசனைத் தைலம் சிரிப்பு
பொன்மொழிகள்
சரியானது என்று உணர்ந்த பிறகும் அதைச்செய்யாமல் இருப்பதுதான் மகா கோழைத்தனம்.
அன்பை அபகரிப்பதில் திருடனாய் இரு!
அறிவைப் பெருக்குவதில் பேராசைக்காரனாய் இரு!
முன்னேற முயற்சிப்பதில் பிடிவாதக்காரனாய் இரு!
கர்வம் கொள்வதில் கஞ்சனாய் இரு!
எதிர்ப்பை வெல்வதில் முரடனாய் இரு!
நாம் பெரும்பாலான மனிதரை வெறுப்பதற்கு முக்கியமான காரணம் அவர்களிடம் இருக்கும் கெட்ட குணங்கள் அல்ல. நம்மிடம் உள்ள கெட்ட குணங்கள்தான்.
கோழையும் வீரனாவான் தன் உரிமைகள் பறி போகும்போது.
என்னால் எதையுமே செய்யமுடியுமென்று தன்மீது தளராத நம்பிக்கை கொண்டு எவன் கடுமையாக உழைக்கின்றானோ அவனுக்கு எப்போதும் வெற்றி கிடைக்கும்.
துன்பங்கள் நிரந்தரமானவை அல்ல, அவை எப்போதும் பாலத்தின் அடியில் ஓடுகின்ற தண்ணீரைப்போல் ஓடிவிடும்.
ஓன்றின் தோல்வி மற்றொன்றின் வெற்றி, ஒன்றின் அழிவு மற்றொன்றின் ஆக்கம், ஒன்றின் ஒடுக்கம் மற்றொன்றின் தோற்றம். இந்த அழிவு ஆக்கங்களிலிருந்தே மனிதனுடைய எண்ணம், சக்தி, செயல் எல்லாம் வளர்ச்சியடைந்து வருகின்றன.
பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் யாருக்கும் உன்னைத் தெரியாது.
பணத்திற்கு நீங்கள் தலைவனாக இருந்தால், அதை நல்ல செயல்களுக்குப் பயன்படுத்துங்கள். அதற்கு நீங்கள் அடிமையாக இருந்தால் அது உங்களைத் தீய செயல்களுக்குப் பயன் படுத்திக் கொள்ளும்.
மாபெரும் தியாகங்கள் மூலமே மாபெரும் சாதனைகளைச் சாதிக்க முடியும்.
தன்மானத்திற்காக எதையும் இழக்கலாம்
எதற்காகவும் தன்மானத்தை இழக்கக்கூடாது.
என்னை அன்பு செய்யுமாறு நான் யாரையும் வருத்திட முடியாது.
நான் செய்யக்கூடியதெல்லாம் அன்பு செலுத்த தகுந்தவனாக என்னை மாற்றிக் கொள்வதுதான்.
மற்றவர்களை எடை போடுவதில் காலத்தைச் செலவழிக்காதீர்கள். ஏனெனில் அவர்களை நேசிக்க உங்களுக்கு நேரமே இல்லாமல் போய்விடும்.
இலட்சியம் இல்லாத மனித வாழ்வு ஆழ்கடலில் துடுப்பில்லாத படகு போன்றது.
முதலில் கீழ்படிவதற்குக் கற்றுக் கொள்ளுங்கள். பிறகு கட்டளையிடும் பதவி உங்களுக்குத் தானாக வந்து சேரும்.
நம்மைத் தாழ்த்திப் பேசும்போது அடக்கமாய் இருத்தல் பெரிய காரியமன்று, நம்மைப் புகழ்ந்துரைக்கும் போது அடக்கமாய் இருத்தலே மிகப் பெரிய வெற்றியாகும்.
துன்பங்கள் அனுபவித்த காலத்தை மறந்துவிடு.
ஆனால் அது உனக்குக் கற்பித்த பாடத்தை மறந்துவிடாதே.
எந்த ஒரு மனிதனுடைய செயலிலும் தவறுகள், குறைகள் ஏற்படலாம். அவற்றை அவ்வப்போது நிரந்தரமாகத் திருத்திக் கொள்ளும் மனப்பக்குவம் வேண்டும். மனிதத்தன்மையும் அதுவேதான்!
பல அறிஞர்களிடம் உறவாடினால் நீயும் அறிஞனாகிறாய். பல பணக்காரர்களுடன் உறவாடினால் பணக்காரனாக மாட்டாய்.!
மணிக்கணக்கில் உபதேசம் செய்வதைவிட ஒரு கணப்பொழுதாயினும் உதவி செய்வதே மேல்.
ஒரு மனிதன் விழாமல் வாழ்ந்தான் என்பது பெருமையல்ல. விழுந்த போதெல்லாம் எழுந்தான் என்பதுதான் பெருமை.
மற்றவனுக்கு உபதேசிப்பது போல் ஒரு எளிமையான விடயம் உலகில் எதுவும் இல்லை.
தோல்வி வந்தால் அது உனக்குப் பிரியமானதாகக் காட்டிக்கொள்! வெற்றி அடைந்தால் அது மிகவும் பழக்கப்பட்டது போல் காட்டிக்கொள்! இதுதான் வாழ்க்கையின் இரகசியம்.
எவ்வளவு இருக்கிறது என்பதைப் பொருத்தல்ல நம் சந்தோஷம். நமக்கு இருப்பவற்றை எந்த அளவு நாம் உணர்ந்து மகிழ்ந்து போற்றி ஆராதிக்கிறோம் என்பதைப் பொருத்ததுதான் நம் சந்தோஷம்.
நாம் வாழ்வதின் நோக்கம் - மகிழ்ச்சி சமாதானம் தான். ஆனால்இதை மறந்து வாழ்வதின் நோக்கம் வெறும் பொருள் சேர்க்க மட்டுமே என்றாகிப் போனால், நிச்சயம் அங்கு மெய்யான மகிழ்ச்சிக்கு தட்டுப்பாடாக இருக்கும்.
கூட்டம் கூடுதல் எளிதான காரியம் ஆனால் ஒன்றுபடுவதுதான் கடினம். உழைப்பும் தியாகமும் சேர்ந்தால்தான் இந்! த ஒற்றுமை உணர்ச்சி பிறக்கும்.
சொல்லில் சுத்தமும, சிந்தனையில் நேர்மையும், செயலில் துணிவும் கூடவே மற்றவர்களையும் தம்மைப்போல் மதிக்கும் பண்பையும் வளர்க்க வேண்டும்.
தவறுகளை ஒத்துக்கொள்ளும் தைரியமும், அதனை திருத்திக்கொள்வதற்கான பலமும்தான் வெற்றி பெறுவதற்கு சிறந்த குணாம்சமாகும்.
வாய்ப்பு வரும் வரும் என்று யாரும் காத்திருக்க வேண்டாம். அந்த வாய்ப்புக்களை நீங்களே தேடித்தான் உருவாக்க வேண்டும். சந்தர்ப்பத்தை உருவாக்குங்கள். வெற்றியை ஈட்டுங்கள்.
பத்திரிகைகளும் புத்தகங்களும் ஓரளவிற்கு உதவி செய்யக்கூடியவை. மற்றவை அனுபவ வாயிலாக அறியவேண்டியவை. கைகாட்டி மரம் வழியைக் காட்டுமே தவிர நாம் போக வேண்டிய இடத்திற்கு நம்மைக் கொண்டு சேர்க்காது.
கிழக்குப் பல்கலைக்கழகம்
இலங்கை.
* ஒவ்வொருவருக்குள்ளும் தெய்வீக சக்தி ஒளிந்து கிடக்கிறது.
அதை வெளிக்கொண்டுவருவது தான் வாழ்வின் லட்சியம்.
இதற்கு அகவாழ்விலும், புறவாழ்விலும் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும்.
* பசியில் உழன்று கொண்டிருப்பவனிடம் தத்துவம் பேசுவது அவனை அவமதிக்கும் செயலாகும்.
அவனுக்கு உணவளித்த பின்னரே, ஆன்மிக போதனையை தொடங்க வேண்டும்.
* மனமும் செயலும் ஒருமித்து நிற்கும் ஒருவன் எச்செயலைச் செய்தாலும்
அதில் அவன் வெற்றி பெறுகிறான். அரிய செயல்கள் யாவுமே பலத்த இடையூறுகளுக்குப் பின்னரே
கைகூடுகின்றன. ஆகையால், ஆண்மையோடு விடாது முயற்சி செய்யுங்கள்.
* ஒருவன் நெருப்பின் நடுவில் கூட துயில் கொள்ள முடியும்.
ஆனால், வறுமையின் பிடியில் துயில் கொள்ள முடியாது.
* தெய்வீகத் தன்மை இல்லாமல் பெறுகின்ற மிதமிஞ்சிய அறிவும் ஆற்றலும்
மனிதனை சாத்தான்களாக்கி ஆணவத்தில் தள்ளி விடுகின்றன.
* பெரியவர்கள் உலகில் பெருந்தியாகங்களைச் செய்கிறார்கள்.
அதன் விளைவாக வரும் நன்மைகளை மனிதகுலம் முழுவதும் அனுபவிக்கிறது.
-விவேகானந்தர்
அறிவே உயர்வு தரும்
* உலகில் மக்கள் செய்யும் பிழைகளுக்கெல்லாம் தலையாய பிழை அறிவு நூல்களைக் கற்காமல் இருப்பதே ஆகும்.
அதனால், நல்ல நூல்களை வாசிப்பதை அன்றாடப்பணியாக்கிக் கொள்ளுங்கள்.
* மனிதனை உயர்த்துவது பணமன்று; பதவியன்று; குலமன்று; பருமன் அன்று; உயரம் அன்று; அறிவு ஒன்றுதான்
மனிதனை உயர்த்த வல்லது.
* ஆண்டவனுக்கு பணக்காரன், இல்லாதவன் என்ற பேதங்கள் சிறிதும் கிடையாது. இறைவனின் சன்னதியில்
அனைவரும் சமம் என்ற உணர்வோடு வழிபாடு செய்யுங்கள்.
* குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் தினமும் ஒன்றுகூடி, காலை அல்லது மாலை நேரத்தில் வழிபாடு செய்வதால்
குடும்பத்தில் அமைதியும், அருளும் தழைக்கும்.
* இனிமையான சொற்களைப் பேசுபவர்களுக்கு உலகில் எந்தத் துன்பமும் இல்லை. எமவாதனை உண்டாகாது.
அவர் இருக்கும் இடத்தில் அருள் துலங்கும்.
* நாம் எந்தப் பாவத்தைச் செய்தாலும் தெய்வத்திடம் மன்னிப்பு பெற்று விடலாம். ஆனால், நன்றி மறந்த பாவத்தை
தெய்வம் ஒருபோதும் மன்னிக்காது.
* தன்னுடைய புத்தகம், பெண், பணம் இவை பிறரிடம் கொடுத்தால் போனது போனது தான். ஒரு வேளை திரும்பி வந்தாலும்
அது தன் தன்மையில் சிதையாமல் இருப்பது என்பது சந்தேகம்தான்.
- கிருபானந்த வாரியார்.
எங்கே செல்கிறது எம் வாழ்கை
இங்கே வேண்டும் சுதந்திர வேட்கை
கத்திகள் கொண்ட கைகள்
இரத்தம் நுகர வேண்டாமே....
ஆதி மனிதன் புனிதன் தானே...
இன்று ஆனோம் தீதனாக
தனி மனிதன் புனிதனாக வேண்டும்
பின் மனிதம் புனிதமாகும்
ஆண்டவன் உன் படைப்பில்
சிறந்ததுமனிதம் தானே
ஆறறிவு மனிதா ஐந்தறிவு
ஆனதென்ன
புத்தி மாறி சித்தம் கலங்கி
போனதென்ன
ஆன்மீக ஏர் எடு
உள்ளத்தை பதப்படுத்து
நேச விதைகள் விதை
அன்பை அறுவடை செய்
மனிதம் புனிதம் ஆகும்
வாழ்க்கை இனிதகும்
* கவிதனு*
காதலை மட்டும் திருப்பி தந்தவள்
கேட்டுக்கொண்டாள் அவள்
தந்த கடிதங்களையும்
நிழல் படங்களையும்
நான் கொடுத்த எதையும்
திருப்பி கேட்பதே இல்லை-காரணம்
அவள் இப்போதுள்ள நிலையில்
கொடுத்த முத்தங்களை
திருப்பி தர வாய்ப்பில்லை
கவிதனு
பாதுகாப்பு வலயத்தில்
வீட்டை தொலைத்த 80 வயது
முதியவரின் புலம்பல்
ஊருக்கு கிழக்காலே
விடி வெள்ளிதெரியும்
என்று நினைத்தார்கள்..
ஊருக்கு போக இருபத்தொரு...
வருடங்கள் காத்திருந்தோம்...
சுற்றங்கள் சுற்றி ஒடி
திரிந்த இடம்....
சுடு காடாய் ஆனதென்ன
இடு காடு போகுமுன்னே - நான்
என் வீடு பர்க்க போகணுமே
தாங்காது என் மனசு
ஊர் பார்க்காம போகாது என் உயிரு.
எப்போதும் நிதானமாக இருங்கள்
* சத்தியத்தையே தீபமாகப் பற்றிக் கொள்ளுங்கள். சுயநலத்தை ஒழித்து எல்லா உயிர்களையும் நேசியுங்கள்.
ஒழுக்கம் என்னும் அடித்தளத்தில் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுங்கள்.
* ஆயிரம் பேர் கொண்ட படையை வெற்றி கொள்வதைக் காட்டிலும், தன்னைத் தானே வென்றவனே வெற்றிவீரன்.
* மனிதன் நல்ல எண்ணங்களுடன் செயல்புரிந்தால் அவனைப் பின்தொடர்ந்து இன்பம் நிழல்போல வரும்.
* தூங்க முடியாமல் விழித்திருப்பவனுக்கு இரவு கொடியதாகும். களைத்துப் போனவனுக்கு செல்லும் வழி மலைப்பைத் தரும்.
அதுபோல தர்மத்தை பின்பற்றாதவனுக்கு வாழ்க்கை துன்பத்தைத் தரும்.
* வெறுப்பு, கடுஞ்சொல் இவற்றிலிருந்து விலகி நில்லுங்கள். எதிர்பார்ப்பு இல்லாமல் அனைவரையும் நேசித்து மகிழுங்கள்.
எந்த நிலையிலும் நிதானத்தைக் கடைபிடியுங்கள்.
* நாவின் ருசிக்காக உயிர்க்கொலை செய்பவன் வாழும்போது மட்டுமில்லாமல் மரணத்திற்குப் பின்னும் துன்பத்தை அடைவான்.
நன்றி -நிலாமுற்றம்
வாழ்க்கையில் வெற்றி என்பது என்ன?
ஊர் ஊராகச் சுற்றி உபதேசம் செய்து விட்டு, தனக்கென்று தலை வைத்துப் படுக்க ஓர் இடமில்லாமல், கடைசியில் சிலுவையில் அறையுண்டு இறந்த ஏசு நாதரை வெற்றியாளர் என்று சொல்லவேண்டுமா, தோல்வியாளர் என்று சொல்லலாமா? இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் ஒற்றுமை ஏற்படுத்த வேண்டுமென்று உண்ணாவிரதம் இருந்து, கால் நடையாகக் காடு மேடெல்லாம் சுற்றி, கடைசியில் இரு வகுப்பினரும் ஒருவரை ஒருவர் கோரமாகத் தாக்கிக்கொண்டிருந்த நிலையில் குண்டு பட்டு இறந்தாரே, அந்த காந்தியடிகள் வெற்றியாளரா, தோல்வியாளரா? அவ்வளவு பெரிய விஷயங்களுக்கெல்லாம் போக வேண்டாம். நாம் நம்முடைய வாழ்க்கையில் வெற்றியாளராகக் கருதப்பட வேண்டுமென்றால், எந்த உரைகல்லில் சோதித்துக் கொள்ளலாம்?
ரால்ப் வால்டோ எமர்ஸன் சொல்வதைக் கேளுங்கள்: ● அடிக்கடி சிரிப்பது, அதிகம் சிரிப்பது
● புத்திசாலிகளின் நேசத்தைப் பெறுவது
● குழந்தைகளின் பாசத்தைப் பெறுவது
● நேர்மையான விமர்சகர்களின் பாராட்டைப் பெறுவது
● நண்பர்களின் துரோகத்தைத் தாங்கிக்கொள்வது
● இயற்கையை ரசிப்பது
● மற்றவர்களிடமுள்ள நல்ல அம்சங்களைப் பராட்டுவது
● ஓர் ஆரோக்யமான குழந்தை
● ஒரு தோட்ட வெளியை உருவாக்கியது
● சமுதாயக் கேடு ஒன்றை சீர்படுத்தியது
● உங்கள் வாழ்க்கையினால் யாராவது தங்கள் வாழ்வில் சற்றேனும் இன்பமடைந்தார்கள் என்று உணர்வது
இவற்றில் ஏதாவது ஒன்று இருந்தால் கூட நீங்கள் வாழ்க்கையில் வென்றவர்களே.
நன்றி-நிலாமுற்றம்